1. கார்காலம் – ஆவணி, புரட்டா சி
2. குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனிக் காலம் – மார்கழி, தை
4. பின்பனிக் காலம் – மாசி, பங்குனி
5. இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி
6. முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி
1. காலை – காலை 6 மணி முதல்10 மணி வரை
2. நண்பகல் – காலை 10 மணி முதல் 2 மணி வரை
3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை.
4. மாலை – மாலை 6 மணி முதல்இரவு 10 மணி வரை
5. யாமம் – இரவு 10 மணி முதல்இரவு 2 மணி வரை
6. வைகறை – இரவு 2 மணி முதல்காலை 6 மணி வரை.
திணை பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறு பெரும்பொழுதுகள் வைகறை
நெய்தல் ஆறு பெரும்பொழுதுகள் எற்பாடு
பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி நண்பகல்
கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
---|---|---|---|---|---|
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | வெற்பன், குறவர், குறத்தியர் | தோன்றல் ஆயர். ஆய்ச்சியர் | ஊரன், உழவர், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றியர் |
உணவு | மலைநெல், தினை | வரகு, சாமை | செந்நெல், வெண்ணெல் | மீன், உப்புக்குப் பெற்ற பொருள் | சூறையாடலால் வரும் பொருள் |
விலங்கு | புலி, கரடி, | முயல், மான், புலி | எருமை, நீர்நாய் | முதலை, சுறா | வலியிழந்த யானை |
பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, தோன்றி | செங்கழுநீர், தாமரை | தாழை, நெய்தல் | குரவம், பாதிரி |
மரம் | அகில், வேங்கை | கொன்றை, காயா | காஞ்சி, மருதம் | புன்னை, ஞாழல் | இலுப்பை, பாலை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி,மயில் | நாரை, நீர்க்கோழி, அன்னம் | கடற்காகம் | புறா, பருந்து |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | அருவி நீர், சுனைநீர் | காட்டாறு | மனைக்கிணறு, பொய்கை | மணற்கிணறு, உவர்க்கழி | வற்றிய சுனை, கிணறு |
பறை | தொண்டகம் | ஏறு கோட்பறை | மணமுழா, நெல்லரிகிணை | மீன் கோட்பறை | துடி |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
பண் | குறிஞ்சிப்பண் | முல்லைப்பண் | மருதப்பண் | செவ்வழிப்பண் | பஞ்சுரப்பண் |
தொழில் | தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் | நெல்லரிதல், களை பறித்தல் | மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் | வழிப்பறி, நிரை கவர்தல் |