செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று
குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச்
செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி,
ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும்
ஆடும்.
சிலம்பு, கிண்கிணி - காலில் அணிவது
அரைநாண் - இடையில் அணிவது சுட்டி - நெற்றியில் அணிவது
குண்டலம், குழை - காதில் அணிவது
சூழி - தலையில் அணிவது
குமரகுருபரர் இயற்றிய முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் பாட ல் பாடப்பகுதியாக
இடம்பெற்றுள்ளது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இதில்
இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அவரைக்
குழந்தையாகக் கருதிப் பாடுவர். பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை
எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப்
பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும். இது ஆண்பாற்
பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.
குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில்
புலமை
மிக்கவர்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்,
மதுரைக்கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர்
மும்மணிக்கோவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
ஆண்பாற்
பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - சிற்றில், சிறுபறை, சிறுதேர்
பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) - கழங்கு, அம்மானை, ஊசல்
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.